மாநகரில் மின்பராமரிப்பு பணிநாளை குடிநீர் விநியோகம் ரத்து
திருச்சி, நவ.11: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஒருசில பகுதிகளில் நாளை ஒரு நாள் மட்டும், குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, திருச்சி மாநகராட்சிக்கு உட்ப ட்ட கம்பரசம்பேட்டை தலை மை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம்-I, வெல் III (Aerator) மற்றும் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம்-II (KFW) ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி இன்று (நவ.11) நடைபெறவுள்ளது. இதனால் கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம்-I, வெல் III (Aerator) மற்றும் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் -II (KFW) ஆகிய நீரேற்று நிலையங்களில் இருந்து விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூர், பாத்திமா நகர், புத்தூர், மங்களம் நகர், செல்வா நகர், பாரதி நகர், சிவா நகர், ஆனந்தம் நகர், Rainbow நகர், தில்லை நகர், அண்ணா நகர், கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்சன், கருமண்டபம், ராமலிங்க நகர், உய்யாகொண்டான்மலை, விஸ்வாஸ் நகர், மிளகுபாறை, கல்லாங்காடு, Society Colony, எம்.எம் நகர் மற்றும் திருவெறும்பூர், வள்ளுவர் நகர், எல்லக்குடி ஆலத்தூர், புகழ் நகர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர், கணேஷ் நகர் விவேகனந்தர் நகர் மற்றும் அம்பேத்கர் நகர் ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நாளை (நவ.12) அன்று ஒருநாள் மட்டும் இருக்காது. நவ.13 முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே. பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்துக்கொண்டு, மாநகராட்சிக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.