தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

7 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியது கள்ளக்கம்பட்டி அரசுப்பள்ளி தரம் உயர்வு

துவரங்குறிச்சி, செப்.3: திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அடுத்த கள்ளக்காம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து மேல்நிலை வகுப்பு துவக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு தரம் உயர்த்தப்பட்டதற்கான ஆணையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். பின்னர் பேசியதாவது: இந்த அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு, பல்வேறு விதமான திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. பல்வேறு நிலைகளில் புறக்கணிக்கப்படும் மனிதர்களை உயர்நிலைக்கு கொண்டு செல்வது கல்வி தான் இந்த அரசு சொல்லி விட்டு செல்வது அல்லது ஆனைத்தையும் முழுமையாக செய்து வருகிறது. வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள நம் முதல்வர் கூட அங்கிருக்கும் தமிழர்களை சந்தித்து பேசும்போது, அரசு பள்ளிகளுக்கு உதவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். படிப்பில் மாணவர்கள் கவனம் செலுத்துங்கள் அதுதான் உங்களை உயர்த்தும் என்று கூறினார். பின்னர் வகுப்பறைக்குச் சென்று வகுப்பறைகளை திறந்து வைத்த அமைச்சர் மாணவர்களுக்கு மேல்நிலை வகுப்புகளை துவக்கி வைத்தார்.

Advertisement

காமராஜர் ஆட்சி காலத்தில் 1956 ல் இப்பள்ளி தொடங்கப்பட்டது. அதன் பின்னர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில், தற்போது பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், பத்தாம் வகுப்பு வரை முடித்த மாணவர்கள் மேல்நிலை கல்வி பயில துவரங்குறிச்சி, புத்தாநத்தம் மற்றும் பன்னாங்கொம்பு பகுதிகளுக்கு சென்று வந்த நிலையில் பள்ளி நேரத்தில் பேருந்து கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.தற்போது தங்கள் ஊரிலேயே மேல்நிலைப்பள்ளி வந்து விட்டதால் மாணவர்களின் சிரமம் குறையும் என்ற பெற்றோர்கள் கடந்த 7 ஆண்டுகளாக கோரிக்கையை தற்போது தமிழக அரசு நிறைவேற்றி தந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.விழாவில் மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது, பண்ணப்பட்டி கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர்கள் சின்னஅடைக்கண், செல்வராஜ், பழனியாண்டி, தாசில்தார் பால காமாட்சி, பிடிஓக்கள், நிஜஸ்டண்ட் ஜோ, சக்திவேல், பள்ளி தலைமையாசிரியர், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News