தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலூர் கோட்டை போலீஸ் பயிற்சி பள்ளியில் 2ம் நிலை பெண் காவலர்களுக்கு நாளை பயிற்சி துவக்கம்: டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர் ஆய்வு

வேலூர், டிச.3: வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் நாளை புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை பெண் காவலர்கள் 200 பேருக்கு பயிற்சி துவங்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து நேற்று காலை டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சமீபத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2ம் நிலை பெண் காவலர்கள் 200 பேருக்கு நாளை வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி தொடங்குகிறது. முதல் 7 மாதங்கள் அடிப்படை பயிற்சியும் இரண்டு மாதங்கள் செயல்முறை பயிற்சி வழங்கப்படுகிறது.

Advertisement

வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சியை மேற்கொள்ள உள்ள 2ம் பெண் காவலர்கள் 200 பேரும் தமிழகத்தின் 16 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதற்கான முன்னேற்பாடுகளை டிஜிபி சந்தீப்ராய்ரத்தோர் நேற்று ஆய்வு செய்ய வந்தார். அவரை எஸ்பி மதிவாணன், பயிற்சி பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன், துணை முதல்வர் விநாயகம், முதன்மை சட்ட போதகர் கனிமொழி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதை எடுத்து மரக்கன்று அவர் நட்டு வைத்தார். தொடர்ந்து பெண் காவலர்கள் பயிற்சி பெறும் வகுப்பறைகள் தங்கும் விடுதி மற்றும் உணவு கூடம் போன்ற இடங்களை சுற்றி பார்த்து ஆய்வு செய்தார்.

Advertisement

Related News