தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மண்வள மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி: பெருமாள் மலை கோயில் பாலாலயம் நிகழ்ச்சி

 

Advertisement

ஈரோடு, ஜூலை 13: ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெருமாள் மலை கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்கான பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. இதில், அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு வழிபட்டார். ஈரோட்டில் இருந்து பவானி செல்லும் சாலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் அமைந்துள்ள பெருமாள் மலையில் 1,500 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற மங்களகிரி பெருமாள் கோயில் உள்ளது.

இக்கோயிலில் கும்பாபிஷேக விழா கடைசியாக கடந்த 1926ம் நடத்தப்பட்டது. அதன்பிறகு கும்பாபிஷேக விழா நடக்கவில்லை. இதையடுத்து பக்தர்கள் பெருமாள் மலை மங்களகிரி பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. 98 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக பணிகள் துவங்கப்பட உள்ளது. இதற்காக கோயிலின் வளாகத்தில் யாகம் வளர்க்கப்பட்டு, பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது.

இதில் அமைச்சர் முத்துசாமி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், அறங்காவலர் குழுத்தலைவர் எல்லப்பாளையம் சிவகுமார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, ஆய்வர்கள் மாணிக்கம், தேன்மொழி, 1வது மண்டல தலைவர் பழனிசாமி, கவுன்சிலர்கள் ஜெகதீசன், மங்கையர்கரசி, திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். பாலாலயத்துக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கயல்விழி செய்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் பெருமாள் மலை கோயிலுக்கு செல்ல சாலை அமைக்கும் பணிக்கான ஆய்வும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News