தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

அருமனை, செப்.7: அருமனை அருகே நண்பன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அதிர்ச்சி அடைந்த தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் அருமனை அருகே குழிச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (60). ரப்பர் பால்வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி டெய்சி பாய். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் ரசல்ராஜ் (60). கூலித்தொழிலாளி. ஜான்சனும், ரசல்ராஜும் பள்ளியில் ஒன்றாக படித்தபோதே நெருங்கிய நட்புடன் பழகி வந்து உள்ளனர். வயதான பிறகும் 2 பேரும் அடிக்கடி பேசிக்கொள்வது, சுக துக்கங்களை பரிமாறிக்கொள்வது என்று நட்பை பேணி வந்து உள்ளனர். இந்தநிலையில் ஜான்சன் சமீபகாலமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை ஜான்சன் ரப்பர் பால் வெட்டும் பணிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார்.

Advertisement

ஆனால் நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிய நிலையில், ஜாண்சன் அதே பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் உள்ள ரப்பர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த அருமனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜான்சனின் உடலை மீட்டனர். இது எதுவும்தெரியாமல் ரசல்ராஜ் வழக்கம்போல் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அதிர்ச்சியுடன் ஓடிவந்த ரசல்ராஜின் மனைவி, உங்களது நண்பன் ஜான்சன் ரப்பர் மரத்தில் தூக்குபோட்டு இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ரசல்ராஜ், எதுவுமே பேசவில்லை. அப்படியே கையில் உணவு வைத்தபடியே சுருண்டு விழுந்து மயங்கினார்.

இதைக்கண்டு பதறிப்போன அவரது மனைவி உடனே ரசல்ராஜை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு பரிசோதித்து பார்க்கையில் ரசல்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர் கூறினார்.

நண்பன் இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளி உயிரை விட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்தும் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News