தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வண்டலூர் முதல் மறைமலைநகர் வரை போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்: போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை

கூடுவாஞ்சேரி: வண்டலூர் முதல் மறைமலைநகர் வரை போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்களை அகற்றி போக்குவரத்து காவல் துறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான வண்டலூர், ஓட்டேரி, கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, வல்லாஞ்சேரி, தைலாவரம், காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் உள்ள ஜிஎஸ்டி சாலையின் இரு புறமும் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தனர். இதேபோல், தனியார் நிறுவனங்கள், கடைகள், கோயில் திருவிழாக்களை முன்னிட்டு டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

Advertisement

இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டே வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் அடிக்கடி விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்து வந்தனர். இதுகுறித்து, நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்னர். அதன்பேரில், நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்து காவல் துறையினருக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் அதிரடியாக உத்தரவிட்டார். இந்நிலையில், விபத்துகளை ஏற்படுத்தும் விதத்தில் அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகளை, போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் ஹேமந்த் குமார் தலைமையில் காவல் துறையினர் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், இதனை தடுக்க வந்த அரசியல் கட்சியினரிடம் அரசு அனுமதி இன்றி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கக்கூடாது. இனிவரும் காலங்களில் நீதிமன்ற உத்தரவை மீறி டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து அனுப்பினார்.

Advertisement

Related News