தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் எடப்பாடி வருகையால் போக்குவரத்து பாதிப்பு: வெயிலில் காத்திருந்து பெண்கள் அவதி

திருத்தணி, மே 14: திருத்தணியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்காக சுட்டெரிக்கும் வெயிலில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பெண்கள் கடும் அவதி அடைந்தனர். அதிமுக பொதுச் செயலாளர், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்னையிலிருந்து சாலை மார்கத்தில் நேற்று திருப்பதிக்குச் சென்றார். அப்போது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணியில் அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் எம்.பி திருத்தணி கோ.அரி தலைமையில் தேசிய நெடுஞ்சாலைக்கு இருபுறமும் பேனர்கள், கட் அவுட்டுகள், அலங்கார தோரணங்கள் அமைத்து 500க்கும் மேற்பட்ட பெண்களிடம் மலர்கள் வழங்கி நிற்க வைத்தனர்.

Advertisement

மதியம் 1 மணிக்கு எடப்பாடி வருவதாகக் கூறி, பெண்களை உச்சி வெயிலில் கால்கடுக்க காக்க வைத்தனர். கத்திரி வெயில் கொளுத்தி வரும் நிலையில் சுமார் 2 மணி நேரம் பெண்கள் நிற்க வைக்கப்பட்டதால் கடும் அவதி அடைந்தனர். முதியோர் நிற்க முடியாமல் தத்தளித்தனர். மாலை 4 மணிக்கு திருத்தணிக்கு எடப்பாடி வருகை தந்தார். அப்போது அவருக்காக காத்திருந்த அதிமுகவினரால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு திருத்தணி கோ.அரி தலைமையில் கிரேன் உதவியுடன் ராட்சத ரோஜா பூ மாலை அணிவிக்கப்பட்டு வீரவாள் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. சுமார் அரைமணி நேரம் நிர்வாகிகள் வரவேற்பை எடப்பாடி ஏற்றுச் சென்ற பின்னர் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

Advertisement

Related News