தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டம்

சிதம்பரம், ஆக. 14: வெள்ளாறு, கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணை, கதவணை கட்ட வலியுறுத்தி சிதம்பரம், புவனகிரி பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. கடலூர் மாவட்டத்தின் முக்கிய ஆறுகளாக விளங்குவது கொள்ளிடம் மற்றும் வெள்ளாறு. இந்த ஆறுகளில் கடல் நீர் உட்புகுந்து தண்ணீர் உப்பு நீராக மாறி விட்டது. இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடலூர் மாவட்ட எல்லையான கருப்பூர் கிராமத்திற்கும், மயிலாடுதுறை மாவட்ட எல்லையான மாதிரவேளூர் கிராமத்திற்கும் இடையே கதவணை கட்ட வலியுறுத்தி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த திட்டம் கைவிடப்படும் நிலையில் உள்ளது.

Advertisement

இதுபோல் புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே பு.ஆதிவராகநல்லூர் கிராமத்தில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் இந்த திட்டமும் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த இரு திட்டங்களையும் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சிதம்பரம், புவனகிரி பகுதியில் வர்த்தகர் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை முதல் 11 மணி வரை சிதம்பரம், புவனகிரி பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

புவனகிரி கடைவீதி, சின்ன தேவாங்கர் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சிதம்பரம் மேல வீதி, கீழவீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, காசுகடை தெரு, போல்நாராயண தெரு, எஸ்பி கோயில் தெரு, சபாநாயகர் கோயில் தெரு, பேருந்து நிலையம் செல்லும் பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நகை கடை, கவரிங் கடை, மளிகை கடை, ஜவுளிக்கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன. அதேபோல் மருந்தகங்கள், பால் கடைகள் திறந்திருந்தன. காலை 11 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு, வழக்கம்போல் இயங்கின.

Advertisement

Related News