தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

9 நாட்களுக்கு பின் பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

உடுமலை, ஜூன் 3: தொடர் மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 9 நாட்களுக்கு பிறகு நீக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உடுமலை அருகே திருமூர்த்தி மலை மீது பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் இந்த அருவியில் சீராக தண்ணீர் கொட்டுவதால் இதில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த ஏப்ரல், மே மாதம் திருமூர்த்தி மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் கூடுதலான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Advertisement

இந்நிலையில் கடந்த 24ம் தேதி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வெள்ளமென கொட்டி மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. தொடர்ந்து ஒரு வாரமாக மழை நீடித்து வந்த நிலையில், நேற்று வெயில் அடிக்க தொடங்கியது. அருவியில் நீர்வரத்து சீரானதால் வெள்ளப்பெருக்கு அபாயம் நீங்கியதை தொடர்ந்து அறநிலைத்துறையினர் சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளித்தனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இல்லை. இருந்த போதும் திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Advertisement

Related News