தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்னுர் அருகே சுற்றுலா பயணிகள் வந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

 

Advertisement

குன்னூர், மே 21: ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்த பிக் அப் வாகனம் குன்னூர் பெட்டட்டி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பின்புறமாக வந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் ஆதிகோப்புலா கிராமத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் 3 பிக் அப் வாகனங்களில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். பிக் அப் வாகனத்தை டிரைவர் மல்லிகார்ஜுனா (31) என்பவர் ஓட்டியுள்ளார்.

ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்ட பின் நேற்று முன்தினம் மாலை குன்னூர் சிம்ஸ் பூங்காவை பார்வையிட்டனர். தொடர்ந்து, பவானி கூடுதுறை செல்வதற்காக குன்னூர் - கோத்தகிரி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பெட்டட்டி சுங்கம் அருகே வளைவான பகுதியில் சென்ற போது மல்லிகார்ஜுனா ஓட்டி சென்ற பிக் அப் வாகனம் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து சரிவான சாலையில் பின்புறமாக வந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் காயமடைந்தவர்களை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவ்விபத்தில், காயமடைந்த 18 பேரில், 2 பேர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  குன்னூர் மருத்துவமனையில் 6 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான காயமடைந்தவர்கள் புறநோயாளி பிரிவில் சிகிச்சை பெற்று சென்றனர். இவ்விபத்து குறித்து வெலிங்டன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement