தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் ஊழியரிடம் 2 சவரன் பறிப்பு 2 பைக் ஆசாமிகளுக்கு வலை செய்யாறு அருகே சமூக நலத்துறை

செய்யாறு, அக்.31: செய்யாறு தாலுகா கீழ்ப்படிப்பாக்கம் விரிவு பகுதி வேதபுரி தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சர்மிஸ்டா(54). இவர் சமூக நலத்துறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளராக உள்ளார். இவர் நேற்று காலை சுமார் 10 மணி அளவில் செய்யாறில் இருந்து மாங்கால் கூட்ரோடு அருகே மாத்தூர் கிராமத்தில் நடந்த முகாமிற்கு தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது மாங்கால் சாலையில், சோழவரம் அருகே ஐய்மன் நகர் எதிரில் அவரது செல்போனிற்கு அழைப்பு வந்தது. இதனால் சர்மிஸ்டா நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் செய்யாறுக்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டே சர்மிஸ்டா கழுத்தில் இருந்த டாலர் செயினை அறுக்க முயன்றனர். இதனை சுதாரித்துக்கொண்ட அவர் டாலரைப் பிடித்துக் கொண்டார். இதனால் இரண்டு சவரன் செயினை மட்டும் அறுத்துக் கொண்டு மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்றனர். இதுகுறித்து சர்மிஸ்டா தூசி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement