தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அன்னாபிஷேக விழாவையொட்டி 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் அண்ணாமலையார் கோயிலில் வரும் 4ம் தேதி

திருவண்ணாமலை, அக்.31: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அன்னாபிஷேக விழா வரும் 4ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று சுவாமிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, பிரசித்தி பெற்ற அன்னாபிஷேக விழா வரும் 4ம் தேதி மாலை நடக்கிறது. அதையொட்டி, கோயில் நிர்வாகத்தின் சார்பில், பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தரிசன நேரம் மற்றும் தரிசன வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, அன்று மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்துக்கு அனுமதியில்லை. மாலை 6 மணிக்கு பிறகு, அன்னாபிஷேகத்தை பக்தர்கள் தரிசிக்கலாம். சுவாமிக்கு அன்னம் சாத்தும்போது, பக்தர்கள் தரிசனம் செய்வது மரபு கிடையாது என்பதால், 3 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

Advertisement

மேலும், நீண்ட நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, ராஜகோபுரம் வழியாக ஒற்றை வழி வரிசை நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வழக்கம் போல, அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்படும். பவுர்ணமி என்பதால், கட்டண தரிசனமும் இல்லை. இந்நிலையில், ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், வரும் 4ம் தேதி இரவு 9.37 மணிக்கு தொடங்கி, 5ம் தேதி இரவு 7.20 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 4ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்ததாகும். ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு சிறப்பு ஏறபாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கிரிவல பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Advertisement