தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அறுந்து கிடந்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி இறந்த பசுவை தொட்டபோது சோகம் கலசப்பாக்கம் அருகே

கலசப்பாக்கம், அக்.30: கலசப்பாக்கம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பசுமாடு பரிதாபமாக பலியானது. இதனை கவனிக்காமல் பசுமாட்டை தொட்ட விவசாயியும் மின்சாரம் தாக்கி இறந்தார். வடகிழக்கு பருவமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதேபோல், நேற்று முன்தினம் இரவும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், துரிஞ்சாபுரம் அடுத்த வடபுழுதியூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனி(60) என்பவர் வீட்டின் வெளியே இருந்த பசுமாட்டை கொட்டகையில் அடைக்க சென்றார்.

Advertisement

அப்போது, அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் பசுமாடு மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது. இதை கவனிக்காத பழனி, மாட்டை தட்டி எழுப்ப முயன்றுள்ளார். அப்போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான விவசாயி பழனிக்கு சின்னபொன்னு என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மின்சாரம் தாக்கி விவசாயி மற்றும் பசுமாடு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement