தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிளீனிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது சேத்துப்பட்டு அருகே 10 ஆண்டுகளாக

சேத்துப்பட்டு, அக்.30: சேத்துப்பட்டு அருகே முறையான மருத்துவம் படிக்காமல் கிளீனிக் நடத்தி 10 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் பஜார் வீதியில் முறையான மருத்துவம் எதுவும் படிக்காமல் போலி டாக்டர் ஒருவர் கிளீனிக் நடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மருத்துவ அலுவலர் நந்தினி தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பெரிய நாயகியம்மன் கோயில் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள ஒரு கிளீனிக்கில் சோதனை செய்தபோது, ஆரணி புலவன்பாடி பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(40) என்பவர் எலக்ட்ரோ ஹோமியோபதி படித்து விட்டு, நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.

Advertisement

மேலும், அவர் கடந்த 10 ஆண்டுகளாக கிளீனிக் நடத்துவதும், தினமும் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுவதும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், கிளீனிக்கில் இருந்த அலோபதி மருந்துகள், ட்ரிப்ஸ் பாட்டில்கள், ஊசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், இதுகுறித்து மருத்துவ அலுவலர் நந்தினி சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து போலி டாக்டர் வெங்கடேசனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலி டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement