தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாரியம்மன் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு பெரணமல்லூர்அருகே

பெரணமல்லூர், ஆக.30: பெரணமல்லூர் அருகே நடந்த மாரியம்மன் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பெரணமல்லூர் அடுத்த கொழப்பலூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற பனையம்மன், மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 5ம்தேதி மாரியம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. தொடர்ந்து விழாவில் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் இரவில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் மாலை 4 மணியளவில் பக்தர்களின் முழக்கத்துடன் மாரியம்மனை வண்ண பூக்களால் அலங்காரம் செய்து தேரில் வைத்து வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர், கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர், அறங்காவல் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Advertisement

Advertisement

Related News