தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராணிப்பேட்டை பெண் தலைமை காவலரை தாக்கி செயின் பறிப்பு ஹெல்மெட் ஆசாமிகளுக்கு போலீஸ் வலை பணிமுடிந்து இரவில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த

ஆரணி, நவ. 29: ஆரணி அருகே பணிமுடிந்து இரவில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த ராணிப்பேட்டை பெண் தலைமை காவலரை தாக்கி செயினை பறித்து சென்ற ஹெல்மெட் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் துரை. இவரது மகள் சரிதா(40), திருமணமாகவில்லை. இவர் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சரிதா வழக்கம்போல் கலவை காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். பின்னர் பணிமுடிந்து நேற்று முன்தினம் இரவு அவரது மொபட்டில் வீட்டிற்கு வந்துள்ளார்.

Advertisement

அப்போது களம்பூர் அடுத்த பார்வதி அகரம் கிராமம் அருகே ஆரணி- சந்தவாசல் ரோட்டில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து அவ்வழியாக பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் சரிதா கழுத்தில் அணிந்திருந்த 10 கிராம் வெள்ளி செயினை தங்க செயின் என நினைத்து அறுக்க முயன்றனர். இதை தடுக்க முயன்ற சரிதாவை தாக்கி, அவரை கீழே தள்ளிவிட்டு வெள்ளி செயினை அறுத்துக்கொண்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த சரிதாவை அவ்வழியாக வந்த பொதுமக்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்றார். இதுகுறித்து சரிதா நேற்று களம்பூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் ெஹல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். பணிமுடிந்து இரவு வீட்டிற்கு சென்ற பெண் தலைமை காவலரை தாக்கி வெள்ளி செயின் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News