தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செய்யாற்றில் சிவசுப்பிரமணிய சுவாமி தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனிதநீராடினர் கலசபாக்கம் அருகே கந்த சஷ்டியையொட்டி

கலசபாக்கம், அக். 29: கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கிரி மலையில் உள்ள சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 22ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு சூரசம்ஹாரம் நடந்தது. இதனை தொடர்ந்து வன்னியனூர் பேட்டை காங்கேயனூர் புதுப்பாளையம் வழியாக தீர்த்தவாரியில் பங்கேற்க குருவிமலை வந்தபோது கிராமங்கள் தோறும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று குருவிமலை கிராமத்தில் செய்யாற்றில் நடைபெற்றது. திரளான பக்தர்கள் புனிதநீராடினர். பின்னர் உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு பெரியநாயகி சமேத கரைகண்டேஸ்வரர் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Advertisement

இன்று காலை குருவிமலை கிராமத்தில் இருந்து உற்சவமூர்த்திகள் புறப்பட்டு கலசபாக்கம் பூண்டி மோட்டூர் வழியாக மீண்டும் நட்சத்திரகிரியை வந்தடைந்தனர். அப்போது திரளான பக்தர்கள் தீபாரதனை செய்தனர். இதேபோல் கலசபாக்கம் அடுத்த பழங்கோவில் கிராமத்தில் உள்ள பாலாம்பிகை சமேத பாலகிரீஸ்வரர் கோயிலில் விழாவில் நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு சூரசம் ஹாரம் நடந்தது. பின்னர் உற்சவமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடந்தது. நேற்று காலை கலசபாக்கம் செய்யாற்றில் பழங்கோயில் கிராமத்தில் சுவாமி முருகப்பெருமானுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா அரோகரா என பக்தி முழக்கத்துடன் புனிதநீராடினர்.

Advertisement

Related News