தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

1200 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் தூத்துக்குடியில் இருந்து ரயிலில் வந்தது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு

திருவண்ணாமலை, அக். 28: திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 1200 மெட்ரிக் டன் உரம் தூத்துக்குடியில் இருந்து ரயிலில் வந்தது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேவையான உரம் 1200 மெ.டன் தூத்துக்குடியில் இருந்து ரயில் மூலம் திருவண்ணாமலைக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. அதனை, வேளாண் இணை இயக்குநர் கண்ணகி மற்றும் வேளாண் அலுவலர் (தரக்கட்டுப்பாடு) அற்புதசெல்வி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து, 668 மெ.டன் யூரியா, 230 மெ.டன் டிஏபி, 302.00 மெ.டன் அமோனியம் குளோரைடு உரங்கள் அனைத்து உர விற்பனை நிலையங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டது, மேலும், இதுகுறித்து வேளாண் இணை இயக்குநர் கண்ணகி தெரிவித்ததாவது: நடப்பு மாதத்திற்கு தேவையான யூரியா 4751 மெ.டன், டிஏபி 4114 மெ.டன், பொட்டாஷ் 1360 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 1520 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 9382 மெ.டன் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரையின்படி பயிருக்கு தேவையான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவிமூலம் ரசீது பெற்று பயன்பெறலாம். தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில், அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதலான விலைக்கு விற்பனை செய்வது அல்லது இதர இடுபொருட்களை வாங்க வேண்டும் என நெருக்கடி கொடுப்பது போன்ற புகார்கள் உறுதி செய்யப்பட்டால் உர கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement