தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்பெண்ணை கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை சாத்தனூர் அணையில் கூடுதல் உபரிநீர் திறப்பு

திருவண்ணாமலை, நவ.27: சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து, அணையின் ஒழுங்குமுறை விதிகளின்படி கடந்த 12.9.2025 அன்று முதல் கட்ட மற்றும் 22.10.2025 அன்று இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, நீர்வரத்திற்கு ஏற்ப உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து, நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,450 கனஅடி நீர் வெளிேயற்றப்பட்டு வந்தது.

Advertisement

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,180 கன அடியாக உள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை (28ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு சாத்தனூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து நேற்று காலை 10 மணி முதல் வினாடிக்கு 2,500 கனஅடி வரை உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையின் அளவினை பொறுத்தும், சாத்தனூர் அணைக்கு மேலே உள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவை பொறுத்தும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம். எனவே, தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement