தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம் ஆரணி அருகே ஆற்காடு-விழுப்புரம் சாலையில்

ஆரணி, செப். 26: ஆரணி டவுன் பழைய ஆற்காடு சாலை அரசு போக்குவரத்து பணிமனை பகுதியில் உள்ள கமண்டலநாகநதி ஆற்றின் குறுக்கே ஆற்காடு-விழுப்புரம் சாலையில் உயர் மட்ட மேம்பாலம், நெடுஞ்சாலைதுறை திட்டங்கள் அலகின் துறையின் மூலம் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.19,20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

மேலும், உயர்மட்ட மேம்பாலப்பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளதால், விரைவில் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்நிலையில், ஆரணி இருந்து இரும்பேடு வழியாக ஆற்காடு-விழுப்புரம் செல்லும் சாலையில், தனிநபர்கள் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சாலையின் இருபுறமும் கோயில், வீடுகள், கடைகள் கட்டி வைத்திருந்தனர்.

இந்த சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல், கமண்டல நகாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம் பணி முடிந்துள்ளதால், ஆற்காடு சாலையுடன் மேம்பாலம் இணைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. இதனால், ஆரணி அரசு பணிமனையில் இருந்த இரும்பேடு கூட்ரோடு வரை இருபுறமும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து நெடுஞ்சாலை துறை உதவி கோட்டபொறியாளர் நாராயணன் தலைமையில் நேற்று அதிகாரிகள் மற்றும் எஸ்ஐ ஜெயச்சந்திரன் 20க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அப்புறப்படுத்தி அவற்றை அகற்றி, சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, இளநிலைபொறியாளர் வரதராஜன், சாலை ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Advertisement