தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு திருவண்ணாமலையில் ‘மகா தீபம்’ ஏற்ற

திருவண்ணாமலை, நவ. 25: கார்த்திகை தீபத்திருவிழாவில் மகா தீபம் ஏற்றுவதற்கான நெய் காணிக்கையை பக்தர்கள் செலுத்த வசதியாக, அண்ணாமலையார் கோயில் அருகே சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்தின் முக்கிய விழாவான, மகாதீப பெருவிழா வரும் 3ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அதையொட்டி, மகாதீபம் ஏற்றும் தீப கொப்பரை கோயிலில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வரும் 6ம் தேதி ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சிதரும். மகா தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய், 1500 மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது.

Advertisement

அதற்காக, ஆவின் நிறுவனத்திடம் இருந்து ஏற்கனவே 4,500 கிலோ தூய நெய் கொள்முதல் செய்யப்பட்டு கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மகாதீபத்திற்கு நெய் காணிக்கையை பக்தர்கள் செலுத்த வசதியாக, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் அடுத்துள்ள திட்டிவாசல் பகுதியில் சிறப்பு நெய் குடம் காணிக்கை பிரிவு நேற்று தொடங்கப்பட்டது. அதில், நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் நெய் குடத்தை காணிக்கையாக அளித்தனர்.

மேலும், நெய் காணிக்கையை பணமாக செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக, ஒரு கிலோ நெய் ₹250, அரை கிலோ நெய் ₹150, கால் கிலோ ₹80 என ரொக்கமாகவும் காணிக்கை பெறப்படுகிறது. எனவே, நெய் காணிக்கையை பணமாக அல்லது காசோலை, வரைவோலையாக செலுத்த விரும்பும் பக்தர்கள் கோயில் 3ம் பிரகாரத்தில் காட்சி மண்டபத்தில் செயல்படும் சிறப்பு பிரிவில் செலுத்தலாம். அதோடு, கோயில் இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் நெய் காணிக்கை செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Related News