தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இளம்பெண்ணை கொன்று சடலத்தை மூட்டை கட்டி விவசாய கிணற்றில் வீச்சு செங்கம் அருகே பரபரப்பு

செங்கம், செப்.25: செங்கம் அருகே இளம்பெண்ணை சரமாரி அடித்துக்கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் சடலம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த வாசுதேவன்பட்டு கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மிதந்தது. நேற்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனடியாக பாச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Advertisement

இதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பது தெரியவந்தது. அவரை யாரோ மர்மநபர்கள் அடித்துக்கொன்று சடலத்தை மூட்டை கட்டி வீசி சென்றிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது தெரியவில்லை. தொடர்ந்து பாச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் நிலையங்களிலும், சுற்றுவட்டாரங்களில் உள்ள ராணிப்பேட்டை, வேலூர் போன்ற மாவட்டங்களிலும் இளம்பெண்கள் காணாமல் போனதாக புகார்கள் வந்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

மேலும் போலீசார் கூறுகையில், ‘பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும். அதேபோல் சம்பந்தப்பட்ட பகுதியில் பதிவான செல்போன் சிக்னல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இளம்பெண்ணை வேறு எங்கேயோ அடித்துக்கொன்று சடலத்தை கொண்டு வந்து வீசி சென்றுள்ளனர். இதனால் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும்’ என்றனர். சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News