தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பைக் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் பலி மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை செங்கம் அருகே பரிதாபம்

செங்கம், செப்.25: செங்கம் அருகே பைக் மீது மினிலாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியாகினர். படுகாயம் அடைந்த மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த உச்சிமலைகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கல்லூரி மாணவன் லோகேஷ்வரன்(21), ஆக்டிங் டிரைவர் குமார்(28) மற்றும் முத்துக்குமார். நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று காலை திருவண்ணாமலைக்கு பைக்கில் சென்றனர். தொடர்ந்து, புதுச்சேரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கண்ணக்குருக்கை கிராமம் வழியாக சென்றபோது எதிரே திருவண்ணாமலையில் இருந்து குப்பம் நோக்கி சென்ற மினிலாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து இவர்களது பைக் மீது மோதியது. இதனால் 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த லோகேஸ்வரன், குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். முத்துக்குமார் படுகாயம் அடைந்தார்.

Advertisement

அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து படுகாயம் அடைந்த முத்துக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், தகவலறிந்த பாச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லோகேஸ்வரன், குமார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய மினிலாரி டிரைவரை வலைவீசி தேடிவருகிறார். சாலை விபத்தில் நண்பர்கள் இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News