தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பைக்குகள் நேருக்கு நேர் மோதி 2 வாலிபர்கள் பலி 2 நண்பர்கள் காயம் செங்கம் அருகே சோகம்

செங்கம், செப். 24: செங்கம் அருகே பைக்குகள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியாகினர். 2 நண்பர்கள் காயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்(20). இவரது நண்பர்கள் புகழ்(19), ராகவன்(14). இவர்கள் 3 பேரும் ஒரே பைக்கில் நேற்றுமுன்தினம் மாலை மேல்செங்கம் நோக்கி சென்றனர். அங்குள்ள பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது இவர்களின் பைக்கும், எதிரே கோவையில் இருந்து செய்யாறு நோக்கி சென்ற அருண்குமார்(22) என்பவரின் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த சதீஷ், புகழ், அருண்குமார் ஆகியோரை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லேசான காயத்துடன் ராகவன் தப்பினார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி புகழ், அருண்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தனர். சதீஷ் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் மேல்செங்கம் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பைக்குகள் மோதி 2வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement