தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகளிர் குழுக்களுக்கு ரூ1.28 கோடியில் நல திட்ட உதவிகள் எம்எல்ஏ வழங்கினார் கலசபாக்கம் ஒன்றியத்தில்

கலசபாக்கம், செப். 23: கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இணைந்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திட்ட இயக்குனர் தனபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் செல்ல பாண்டியன் வரவேற்றார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் கலந்துகொண்டு மகளிர் குழுக்களுக்கு ரூ1.28 கோடி நல திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியில் மகளிருக்காக எண்ணற்ற திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். கலைஞர் வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டணமில்லா மகளிர் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை புதுமைப்பெண் திட்டங்கள் நிறைவேற்றி வருகிறார். எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான பொற்கால ஆட்சி தொடர்ந்தால் தான் பெண்கள் நல திட்டங்கள் நிறைவேறும். பெண்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பிடிஓ ராஜேஸ்வரி, ஒன்றிய திமுக செயலாளர்கள் சிவக்குமார், சுப்பிரமணியன், நகர செயலாளர் சவுந்தர்ராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் மஞ்சுளா, சுதாகர், பிச்சாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் மோகன் நன்றி கூறினார்.

Advertisement

Advertisement