தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நகை வாங்க பைக்கில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு போலீசார் விசாரணை திருவண்ணாமலையில் பட்டப்பகலில் கைவரிசை

திருவண்ணாமலை, செப். 23: திருவண்ணாமலையில் நகை வாங்குவதற்காக பைக்கில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செங்கம் தாலுகா, கரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரேசன் மகன் அஜீத்(25). இவர், கரியமங்கலம் கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு நகை வாங்குவதற்காக நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். திருவூடல் தெருவில் உள்ள ஒரு நகை கடைக்கு சென்று நகையை தேர்வு செய்து முடித்த பிறகு, கூடுதலாக ரூ.10 ஆயிரம் தேவைப்பட்டது. எனவே, கொண்டுவந்த பணத்தை பைக்கில் வைத்துவிட்டு, ராமலிங்கனார் தெருவில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு சென்றார்.

Advertisement

அங்கு ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வந்து பார்த்தபோது, பைக் பெட்டி திறந்து கிடந்தது ெதரியவந்தது. மேலும், அதில் இருந்த ரூ.2 லட்சத்து 3 ஆயிரம் திருடுபோனது தெரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நகைக்கடையில் இருந்து நோட்டமிட்டு, பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பணத்தை திருடியிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசில் அஜீத் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருட்டு நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Advertisement