தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செய்யாறு அருகே ‘மச்சான்’ என அழைத்த தனியார் கம்பெனி ஊழியருக்கு கத்தி வெட்டு சிறுவன் உட்பட 3 பேர் கைது

செய்யாறு, செப்.22: செய்யாறு அருகே பைக்கில் சென்றவர்களை ‘மச்சான்’ என அழைத்த தனியார் கம்பெனி ஊழியருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். செய்யாறு அடுத்த நாட்டேரி பகுதியை சேர்ந்தவர் நேதாஜி(28). செய்யாறு சிப்காட் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் செல்போனில் தனது வீட்டின் அருகே பேசிக்கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது, அவ்வழியாக பைக்கில் சென்ற 3 பேரை பார்த்து, தெரிந்தவர்கள் போல் இருந்துள்ளதால் `டேய் மச்சான்' என அழைத்தாராம். இதனால் அந்த 3 பேரும், பைக்கை நிறுத்திவிட்டு அங்கு வந்துள்ளனர். ‘யாரை மச்சான்’ என அழைக்கிறாய்? எனக்கேட்டு வாக்குவாதம் செய்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், மறைத்து வைத்திருந்த கத்தியால் நேதாஜியை வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இதில், படுகாயம் அடைந்த நேதாஜியை பெற்றோர் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் செய்யாறு டிஎஸ்பி கோவிந்தசாமி, தூசி இன்ஸ்பெக்டர் ஜெகன்னாதன், பிரம்மதேசம் சப்- இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நேதாஜியை வெட்டியவர்கள் பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த செல்வம்(19), பனமுகை கிராமத்தை சேர்ந்த இமயவர்மன்(19) மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக நாட்டேரி பகுதியில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Advertisement

Related News