தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தலையில் தேங்காய் விழுந்து 4 மாத கைக்குழந்தை பலி தேவிகாபுரம் அருகே தென்னை மரத்தில் இருந்து

சேத்துப்பட்டு, ஆக.22: தேவிகாபுரம் அருகே 4 மாத கைக்குழந்தையின் தலை மீது தென்னை மரத்தில் இருந்து தேங்காய் விழுந்ததில் குழந்தை பரிதாபமாக இறந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா, வலசை கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன் மகன் சிலம்பரசன்(30). கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் அடுத்த மலையம்புரடை கிராமத்தை சேர்ந்த ராஜா மகள் அமுதா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், சிலம்பரசன், மனைவி அமுதாவுக்கு பிரசவம் பார்க்க தனது மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார். கடந்த 4 மாதங்களுக்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் மலையாம்புரடை கிராமத்தில் இருந்து வந்தனர்.

Advertisement

இந்நிலையில், நேற்று முன்தினம் குழந்தையை அமுதாவின் தந்தை ராஜா தோளில் சாய்த்தபடி தெருவில் நடந்து கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் அருகில் உள்ள தென்னை மரத்தில் இருந்து முதிர்ந்த தேங்காய் ஒன்று எதிர்பாராதவிதமாக குழந்தை தலை மீது விழுந்தது. இதில், சுய நினைவு இழந்த குழந்தையை உறவினர்கள் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிசிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை நேற்று பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தந்தை சிலம்பரசன் கொடுத்த புகாரின்பேரில் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News