தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மண்மலை குன்றை குடைந்து கோயில் புனரமைப்பு பணி நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை செங்கம் அருகே

செங்கம், ஆக. 20: செங்கம் அருகே மண்மலை கிராமத்தில் மண்மலை குன்று உள்ளது. இந்த குன்றின் மேல் மேட்டு பாலசுப்பிரமணியர் கோயில் பல ஆண்டு காலமாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கோயிலை புனரமைக்க நிதி ஒதுக்கி செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு தேவையான மண் மற்றும் மொரம்பு மண்ணை மண்மலையில் இருந்தே ஜேசிபி மூலம் குடைந்து எடுத்து பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. குன்றுமேட்டு முருகன் கோயில் அருகாமையிலேயே மண்மலையில் பல்வேறு இடங்களில் மண் எடுக்கபட்டுள்ளதாம்.

Advertisement

பள்ளம் ஏற்பட்ட பகுதியில் ஜேசிபி மூலம் மலையைத் தோண்டி சமன் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புனரமைப்பு பணிக்காக அரசு நிதி ஒதுக்கி உள்ள நிலையில் அதற்கு தேவையான மண் மொரம்பு மணல் சிமெண்ட் போன்ற தளவாடப் பொருட்கள் போன்றவை வெளியில் இருந்து கொண்டு வந்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் குன்று மேட்டை குடைந்து அதில் இருந்து மண் எடுக்கப்படுகிறது என பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மண்மலை முருகர் கோயில் பக்தர்களின் ஆன்மீக வழிபாட்டு தளம் குன்றிருக்கும் இடத்தில் தான் குமரன் இருப்பார் என்பது தெய்வீக பழமொழி, அந்த மொழிக்கேற்ப இருக்கும் இந்த கோயிலில் மரபு மீறி செயல்படுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement