தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காதல் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை கணவன் கைது தகாத உறவு, வரதட்சனை கொடுமையால் விரக்தி

ஆரணி, நவ.19: காதல் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த வழக்கில் கணவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ராந்தம்கொரட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்(32), டிரைவர். இவரது மனைவி மாலதி(26). இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே குடும்பதகராறு ஏற்பட்டு வந்தது. அப்போதெல்லாம் சதீஷ், அவரது தாய் சசிகலா, தம்பி சரண் ஆகிய 3 பேரும் சேர்ந்து மாலதியை, அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி பணம், நகை வாங்கி வர சொல்லி துன்புறுத்தி வந்துள்ளனர்.

Advertisement

இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், மதுராகட்சிகுப்பம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்ற மாலதியை, அவரது பெற்றோர் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் சதீஷூக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தகாத உறவு இருந்துவந்தது. இதையறிந்த மாலதி தனது கணவனை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சதீஷ் அவரது மனைவி மாலதியை ஆபாசமாக பேசி திட்டி அடித்து துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், மனவேதனை அடைந்த மாலதி நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, மாலதியின் தாய் மருதம்மாள்(40) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மாலதியின் கணவர் சதீஷை நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சசிகலா, சரண் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement