தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்சாரம் பாய்ந்து தச்சுத்தொழிலாளி பலி செய்யாறு அருகே

செய்யாறு, அக்.16: செய்யாறு அருகே மின்சாரம் பாய்ந்து தச்சுத்தொழிலாளி பரிதாபமாக பலியானார். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த நீலகண்டராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கணபதி(35), தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 4 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், கணபதி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த செய்யாற்றைவென்றான் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்து தச்சு வேலை செய்து வந்தார். அதேபோல், நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டிருந்தபோது மரக்கட்டைகளை அறுத்த வைத்திருந்த இயந்திரத்தின் மின் வயரை எதிர்பாராமல் மிதித்தாக தெரிகிறது. இதனால் மின்சாரம் பாய்ந்து கணபதி தூக்கி வீசப்பட்டார். இதில், படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கணபதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சித்ரா அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement

Advertisement