தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூதாட்டியிடம் நகை, பணம் திருட்டு உதவி செய்வது போல் நடித்து

ஆரணி, செப்.16: ஆரணி அரசு மருத்துமனையில் மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். ஆரணி அடுத்த வெள்ளேரி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியம்மாள்(76). இவர் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு நேற்று வந்தார். அங்கு டாக்டர்கள், கன்னியம்மாளை பரிசோதனை செய்து ஸ்கேன் எடுப்பதற்காக அனுப்பினர். அப்போது, மாஸ்க் அணிந்த மர்ம நபர் ஒருவர் கன்னியம்மாளிடம் சென்று ஸ்கேன் எடுக்கும்போது கம்பல், மூக்குத்தி அணிந்திருக்கக் கூடாது, அதனை என்னிடம் கழட்டி கொடுங்கள் எனக் கூறியுள்ளார்.

Advertisement

இதனால், கன்னியம்மாள் ரூ.500, கம்பல், மூக்குத்தி என ஒரு சரவன் நகையை கழட்டி அந்த நபரிடம் கொடுத்து தனது பையில் வைத்திருக்குமாறு கூறிவிட்டு ஸ்கேன் எடுக்க சென்றுள்ளார். பின்னர், வந்து பார்த்தபோது அந்த நபர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடி பார்த்தும் அந்த நபர் கிடைக்கவில்லை. அவர் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மூதாட்டி கன்னியம்மாள் ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement