தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு டிசம்பர் 4ம் தேதி நடைபெற உள்ள

திருவண்ணாமலை, செப்.16: வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீப திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருவிழா வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, கோயில் இணை ஆணையர் பரணிதரன் உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

அப்போது, தீபத் திருவிழாவை முன்னிட்டு 24 தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் 116 கார் பார்கிங், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் சிறப்பு பஸ்கள் இயக்கம், பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், கிரிவலப் பாதை மற்றும் மாட வீதி போன்ற இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்றவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு செய்து முடித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதேபோல், அன்னதானம் வழங்குவதற்கான அனுமதி வழங்குதல், மருத்துவ முகாம்கள் அமைத்தல் போன்ற பணிகளை முன்கூட்டியே திட்டமிட்ட வேண்டும் என்றார்.

Advertisement