தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை சாகும் வரை சிறையில் இருக்க உத்தரவு திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு

திருவண்ணாமலை, ஆக.15: சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கார்ணம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் அரவிந்த்(20). இவர் கடந்த 7.3.2020 அன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை மிரட்டி கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து சிறுமி கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, சிறுமியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

Advertisement

அப்போது, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது தெரியவந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வாலிபர் அரவிந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அரவிந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தார். மேலும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார். அதோடு, அரவிந்த் தனது வாழ்நாள் முழுவதும் (சாகும் வரை) சிறையில் இருக்க வேண்டும் என தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அரவிந்தை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement