தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூதாட்டியை தாக்கி 3 சவரன் செயின் பறிப்பு ஆரணி அருகே பட்டப்பகலில் துணிகரம் லிப்ட் தருவதாக கூறி பைக்கில் ஏற்றிக்கொண்டு

ஆரணி, செப். 12: ஆரணி அருகே லிப்ட் தருவதாக கூறி பைக்கில் ஏற்றிக்கொண்டு மூதாட்டியை தாக்கி 3 சவரன் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வெட்டியாந்தொழுவம் பகுதியில் உள்ள எம்பி தாங்கல் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன். இவரது மனைவி மலர்(60), இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். சீனிவாசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், மலர் தனது மூத்த மகன் ராஜசேகர் வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மலர் சென்னையில் உள்ள அவரது இளைய மகன் ஜெயபால் வீட்டிற்கு சென்று, அவர்களுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான எம்பி தாங்கல் கிராமத்திற்கு மலர் பஸ்சில் வந்துள்ளார்.

Advertisement

அப்போது, ஆரணி அடுத்த அப்பந்தாங்கல் கூட்ரோட்டில் இறங்கி வீட்டிற்கு செல்வதற்காக மொரப்பந்தாங்கல்-ஒண்டிகுடிசை செல்லும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக ஒருவர் ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்துள்ளார். மலரை பார்த்தவுடன் திடீரென அந்த நபர் பைக்கை நிறுத்தி, நான் ஒண்டிகுடிசை வரை செல்கிறேன், அதனால், லிப்ட் தருவதாக கூறி பைக்கில் ஏற்றி சென்றுள்ளார். பின்னர், ஒண்டிகுடிசை பாக்கு தோப்பு அருகே சென்றபோது, திடீரென அந்த நபர் பைக்கை நிறுத்தி பெட்ரோல் போட்டு வருவதாக கூறி இறக்கிவிட்டுள்ளார்.

இதனால், மூதாட்டி சாலையில் நடந்து சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும் அந்த நபர் மூதாட்டியை தாக்கி கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு, பைக்கில் வேகமாக தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து, ஆரணி தாலுகா போலீசில் மூதாட்டி மலர்(60), கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். ஆரணி அருகே பைக்கில் லிப்ட் தருவதாக கூறி பட்டப்பகலில் மூதாட்டி கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பைக் ஆசாமி திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement