தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊர்க்காவல் படைவீரர் தூக்கில் சடலமாக மீட்பு கொலையா? போலீசார் விசாரணை மேல்செங்கம் வனக்காவலர் குடியிருப்பில்

செங்கம், அக். 11: மேல்செங்கம் வனக்காவலர் குடியிருப்பில் ஊர்க்காவல் படைவீரர் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கத்தை சேர்ந்தவர் சுரேஷ்(40), இவர் மேல்செங்கம் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் மாலை இவர் செங்கம் பகுதியில் வனக்காவலர்கள் குடியிருப்பில் உள்ள அறையில் தூக்குப்போட்டு சடலமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த மேல்செங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சுரேஷ் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் ஊர்க்காவல் படை வீரர் இறப்புக்கு 4 பேர் மீது சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் புகார் அளித்தும் அவர்களை அழைத்து விசாரிக்கவில்லை என நேற்று மேல்செங்கம் காவல் நிலையம் முன் உறவினர்கள் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த டிஎஸ்பி ராஜன் மேல் ெசங்கம் இன்ஸ்பெக்டர் சாந்தி அந்த 4 பேரையும் அழைத்து விசாரித்து சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்ததின் பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இன்று சுரேஷின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்து அதன் தொடர்ச்சியாக விசாரணை மற்றும் அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

Related News