தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மான் வேட்டையாடியவர் கைது சாத்தனூர் வனப்பகுதியில்

தண்டராம்பட்டு, செப்.11: சாத்தனூர் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய நபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சொர்ப்பனந்தல் மேற்கு பீட் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் மான் வேட்டை நடப்பதாக மாவட்ட வன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சாத்தனூர் அணை வனச்சரக அலுவலர் தமிழரசன், வனவர்கள் குமார், சிவக்குமார், வனக்காப்பாளர்கள் ராம்குமார், சிலம்பரசன், கார்த்திக், வீரச்செல்வன், இந்திரகுமார் தலைமையில் வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

Advertisement

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை சந்தேகத்தின்பேரில் மடக்கி சோதனை செய்தனர். அதில், மானை வேட்டையாடி இறைச்சியை பிளாஸ்டிக் கவரில் மூட்டை கட்டிக்கொண்டு செல்வது தெரியவந்தது. மேலும், மான் வேட்டையாடியவர் புதுப்பாளையம் அடுத்த வீரானந்தல் கிராமத்தை சேர்ந்த பெருமாள்(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர், மான் இறைச்சி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து பெருமாளை கைது செய்தனர். பின்னர், அவரை தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவண்ணாமலை சிறையில் அடைத்தனர்.

Advertisement