தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்டிட தொழிலாளி வீட்டில் 6 சவரன் திருட்டு போலீசார் விசாரணை களம்பூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்

ஆரணி, செப்.11: களம்பூர் அருகே பட்டப்பகலில் கட்டிட தொழிலாளி வீட்டின் பூட்டு உடைத்து 6 சவரன் நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் அடுத்த புங்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன்(36), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுகுணா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ஜெகன், அவரது மனைவி இருவரும் வழக்கம் போல் கட்டிட வேலைக்கு சென்றுள்ளனர். அவரது மகன், மகளும் வீட்டை பூட்டிக் கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளனர்.

Advertisement

பின்னர், மாலை வேலையை முடித்துவிட்டு கணவன், மனைவி இருவரும் வீட்டிற்கு வந்தனர். அப்போது, வீட்டின் பின்பக்கம் உள்ள கதவின் பூட்டு உடைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஆறரை சவரன் மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜெகன் அளித்த புகாரின்பேரில் களம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement