தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளி மாணவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதி கலெக்டர் நலம் விசாரித்தார் கள்ளக்குறிச்சியில் பல்லி விழுந்த சத்துணவு சாப்பிட்ட

திருவண்ணாமலை, செப்.9: பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்களை கலெக்டர் தர்ப்பகராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அடுத்த ஜம்பை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், நேற்று மதியம் வழக்கம்போல மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டனர். அதில், பல்லி ஒன்று விழுந்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, மதிய உணவு சாப்பிட்ட சில மாணவர்களுக்கு வாந்தியும் லேசான மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் பரவியதும், பெற்றோர்கள் பதற்றத்துடன் பள்ளிக்கு விரைந்து வந்துள்ளனர்.

Advertisement

தொடர்ந்து, பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர், மாணவர்கள் அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை, திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், ஒவ்வாமை காரணமாக சிலருக்கு வாந்தியும், மயககமும் ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனாலும், மாணவர்களை தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்த பிறகு டிஸ்சார்ஜ் செய்யுமாறு கலெக்டர் தெரிவித்தார். தொடர்ந்து, நேற்று மாலை முதல் படிப்படியாக மாணவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement