தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீப திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் வேலூர் சரக டிஐஜி ஆய்வு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, அக். 8: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீப திருவிழா பாதுகாப்புக்கு முன்னேற்பாடு குறித்து வேலூர் சரக டிஐஜி ஆய்வு செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவின் நிறைவாக டிசம்பர் 3ம் தேதி மகா தீப பெருவிழா நடைபெற உள்ளது. விழாவில், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, முன்கூட்டியே அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், தீபத்திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அண்ணாமலையார் கோயிலில் வேலூர் சரக டிஐஜி தர்மராஜன் மற்றும் திருவண்ணாமலை எஸ்பி சுதாகர் ஆகியோர் நேற்று நேரடி ஆய்வு நடத்தினர்.

Advertisement

அப்போது, தீபத் திருவிழாவின் போது அண்ணாமலையார் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளை பொருத்துதல், பக்தர்களை அனுமதிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டு பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரிக்கலாம் என்பதால், கோயில் உள்பிரகாரம் மற்றும் மாத வீதி கிரிவலப்பாதை போன்ற இடங்களில் நெரிசல் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆய்வின்போது, கூடுதல் எஸ்பிக்கள் குணசேகரன், அண்ணாதுரை, ஏஎஸ்பி சதீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement

Related News