தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செண்பகத்தோப்பு அணை திறப்பு படவேடு அருகே

கண்ணமங்கலம், அக். 8: திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருகே உள்ள செண்பகத்தோப்பு அணையிலிருந்து நீர் ஜவ்வாது மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக செண்பகத் தோப்பு அணையில் வினாடிக்கு 121 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 62.32 அடியாகும். எனவே வினாடிக்கு 121 கன அடி நீர் அணைக்கு வந்து சேர்வதால் அணையின் நீர்மட்டம் தற்போது 57. 83 அடியாக. உயர்ந்துள்ளது. மேலும் அணையின் நீரின் கொள்ளளவு மொத்தமாக 287 மில்லியன் தற்போது அதிக நீர் வரத்து காரணமாக 242 மில்லியன் இருப்பு உள்ளது.

Advertisement

இதனால் பொதுப்பணி மற்றும் நீர்வளத் துறையின் பரிந்துரையின்படி அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 150 கன அடி நீரை அணையின் இரண்டு மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரானது படவேடு, சந்தவாசல், களம்பூர் வெள்ளுர் ஆகிய கிராமங்களின் வழியாகச் சென்று ஆரணியில் கமண்டல நாகநதியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த கமண்டல நாகநதி ஆறானது ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கு மிக முக்கியமான நதியாக கருதப்படுகிறது. ஆற்றில் வெள்ளம் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால் நீர் ஆதாரமாக விளங்கும் ஏரி, குளம், நீர் ஆதார கால்வாய்கள்கள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

இதனால் 5000 ஹெக்டேர்க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கமண்டல நாகநதி ஆறானது ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களின் விவசாயத்திற்கு பெரிதும் பாசன வசதி பெற காரணமாக உள்ளது. மேலும், செய்யார், வந்தவாசி, திண்டிவனம், மேல்மருவத்தூர், மரக்காணம், வழியாக புதுச்சேரி சென்று பின்னர் கடலில் கலக்கிறது. தற்போது செண்பகத் தோப்பு அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் ஆரணி கமண்டல நாக நதி ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணைகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

Related News