தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கார் டிரைவரிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் * எஸ்பி அதிரடி உத்தரவு * வீடியோ வைரலாகி பரபரப்பு கலசப்பாக்கத்தில் விபத்து ஏற்படுத்திய

கலசப்பாக்கம், ஆக.8: கலசப்பாக்கத்தில் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை ஜாமீனில் விடுவிக்க ரூ.7 ஆயிரம் வாங்கிய எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் செய்து எஸ்பி சுதாகர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டம், காந்திபுரம் தில்லை நகரை சேர்ந்தவர் மாரியப்பன்(50). இவர் கார்களை வாடகைக்கு விட்டு வருகிறார். இவரது காரில் கடந்த மாதம் 18ம் தேதி திருச்சியில் இருந்து 3 நபர்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளனர். காரை திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் கிராமத்தை சேர்ந்த சாரதி(27) என்பவர் ஓட்டி வந்தார். தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக செய்யாற்றில் உள்ள மேம்பாலத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் டிரைவர் சாரதி மற்றும் காரில் வந்தவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து கலசப்பாக்கம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். தொடர்ந்து, வழக்கில் இருந்து டிரைவர் சாரதியை ஜாமீனில் விடுவிக்க லஞ்சம் கேட்டாராம். இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், முதல் தவணையாக ரூ.5 ஆயிரம், இரண்டாவது தவணையாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாகவும், மீதத்தொகையை பின்னர் தருவதாகவும் டிரைவர் சாரதி குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ எஸ்பி சுதாகர் கவனத்திற்கு சென்ற நிலையில், கலசப்பாக்கம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தனை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.