தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் மறியல் சேத்துப்பட்டு அருகே பரபரப்பு

சேத்துப்பட்டு, ஆக.8: சேத்துப்பட்டு அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேத்துப்பட்டு ஒன்றியம், விளாப்பாக்கம் கிராமத்தில் ஒரு பகுதியை சேர்ந்த 80 நபர்கள் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களாக உள்ளனர். தற்போது இவர்களில் 40 பேருக்கு மட்டுமே வேலை கிடைப்பதாகவும், அரசு நிர்ணயம் செய்த கூலியை வழங்காமல் குறைத்து வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஏற்கனவே 2 முறை சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆணையாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, நேற்று பெண் தொழிலாளர்கள் பலர் விளாப்பாக்கம் கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று சேத்துப்பட்டு- போளூர் நெடுஞ்சாலையில் கொம்மனந்தல் கூட்ரோடு பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போளூர் இன்ஸ்பெக்டர் அல்லிராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, ஆணையாளர் வேலு, பணி பார்வையாளர் ஜெயச்சந்திரன் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் எழில்மாறன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதையேற்று சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அங்கு அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.