தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

டாஸ்மாக் கடைக்கு பெண்கள் எதிர்ப்பு வந்தவாசி அருகே புதிதாக திறக்கும்

வந்தவாசி, ஆக.8: வந்தவாசி அருகே புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் கடைக்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வந்தவாசி அடுத்த கீழ்ப்பாக்கம்- கீழ்நர்மா சாலையில் உள்ள கொவளை கூட்ரோடில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. பொதுமக்களுக்கு இடையூறான இந்த கடையை மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் கீழ்ப்பாக்கம்- கீழ்கொடுங்காலூர் சாலையில் உள்ள காலியான கட்டிடத்தில் இடம் மாற்றம் செய்ய முடிவு செய்தனர். நேற்று முன்தினம் கொவளை கூட்ரோடு டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை கொண்டு செல்ல முயற்சி செய்தனர்.

இதையறிந்த கீழ்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கடை முன்பாக அமர்ந்தனர். தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, நேற்று போலீஸ் பாதுகாப்புடன் கீழ்ப்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட உள்ள கடைக்கு மதுபாட்டில்களை கொண்டு வந்தனர். மேலும், மது போதை ஆசாமிகளால் இடையூறு ஏற்படாத வகையில் கடையின் இரு பகுதிகளிலும் வேலி அமைக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினர்.