தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விளையாடிய குழந்தைகளை தூக்கி செல்ல முயன்ற மூதாட்டி பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் சேத்துப்பட்டு அருகே வீட்டின் வெளியே

சேத்துப்பட்டு, டிச.7: சேத்துப்பட்டு அருகே வீட்டின் வெளியே விளையாடிய குழந்தைகளை தூக்கிச் செல்ல முயன்ற மூதாட்டியை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவில் நேற்று மூதாட்டி ஒருவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் பசிக்கு உணவு கேட்டபடி சுற்றிக்கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 3 வயது குழந்தையை தூக்கிச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த சிறுவனின் தந்தை கூச்சலிட்டதும், மூதாட்டி சிறுவனை விட்டுவிட்டு சென்றுள்ளார்.

Advertisement

தொடர்ந்து அந்த மூதாட்டி பக்கத்து தெருவில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை தூக்கிச்செல்ல முயன்றுள்ளார். அந்த குழந்தையின் தாய் கூச்சலிட்டதும், அங்கிருந்தும் அந்த மூதாட்டி தப்பி சென்று, அங்குள்ள மாரியம்மன் கோயிலில் அமர்ந்துள்ளார். அவரை அப்பகுதி மக்கள் பிடித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையின்போது மூதாட்டி மனநிலை பாதித்தவர் போல் பேசியதோடு, முகவரியை மாற்றி மாற்றி கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் மூதாட்டியிடம் மீண்டும் குழந்தைகளை தூக்கிச்சென்றால் சிறையில் அடைத்து விடுவோம் என்று எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement