தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காய்ச்சலால் 2வயது குழந்தை பலி சேத்துப்பட்டு அருகே

சேத்துப்பட்டு, நவ. 8: சேத்துப்பட்டு அருகே காய்ச்சலால் 2வயது குழந்தை உயிரிழந்தது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மேல் வில்லிவனம் சாமந்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர்(32) கூலி தொழிலாளி. இவரது மனைவி மீனா. இவர்களுக்கு ரித்திகா(4), ஜெயா(3), தினநாதன்(2) என 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி மாலை மகன் தினநாதனுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி குழந்தை நல மருத்துவர் கூறியுள்ளார். திருவண்ணாமலை மருத்துவமனையில் குழந்தை தினநாதனை பரிசோதித்த டாக்டர் குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் குழந்தையின் சடலத்தை பிணவறையில் வைத்தனர். இதுகுறித்து ராஜசேகர் சேத்துப்பட்டு போலீசில் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார் நேற்றுமுன்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் இறப்புக்கு காரணம் நிமோனியா காய்ச்சலாக இருக்கக்கூடும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Related News