தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குடியரசு தின தடகள போட்டிகள் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார் கீழ்பென்னாத்தூர் குறுவட்ட அளவில்

திருவண்ணாமலை, ஆக.7: கீழ்பென்னாத்தூர் குறுவட்ட அளவிலான குடியரசு தின தடகள விளையாட்டு போட்டிகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், வட்ட அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், கீழ்பென்னாத்தூர் குறுவட்ட அளவிலான குடியரசு தின தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. போட்டியின் தொடக்க விழாவுக்கு மாவட்ட உடற்கல்வி இயக்குநர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் விஜய்ஆனந்த் வரவேற்றார். விழாவில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார்,

நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகபிரியா, மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெகதீசன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகம், ராமஜெயம், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 100 மீட்டர், 200 மீட்டர், 1,000 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. அதில், வெற்றி பெறும் வீரர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். அதன் தொடர்ச்சியாக, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது.