தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் உத்திர காவேரி ஆற்றில்

ஒடுகத்தூர், ஆக.6: ஒடுகத்தூர் பகுதிகளில் உள்ள உத்திரிக்காவேரி ஆற்றில் இரவும், பகலும் மணல் கடத்தல் நடந்து வருவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதன்படி, இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் உத்திரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சேர்பாடி, கெங்கசாணி குப்பம், கொட்டாவூர், கத்தாரிகுப்பம், மடையாப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் வழியாக செல்லும் உத்திர காவேரி ஆற்றங்கரையோரம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சேர்பாடி பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து டிராக்டரில் சட்டவிரோதமாக ஒருவர் மணல் கடத்தி வந்து கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடிக்க முயன்ற போது அந்த நபர் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதனையடுத்து உடனடியாக கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை போலீசார் மணலுடன் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், பெரிய ஏரியூர் கிராமத்தை சேர்ந்த குமரன்(40) என்பவருக்கு சொந்தமான டிராக்டர் என தெரிய வந்தது. பின்னர், மணல் கடத்தல் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள குமரனை வலை வீசி தேடி வருகின்றனர்.

Related News