தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒரே நாளில் 250 டன் குப்பைகள் அகற்றிய 2 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் கலெக்டர் கைகூப்பி நன்றி தெரிவித்ததால் நெகிழ்ச்சி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில்

திருவண்ணாமலை, டிச.5: திருவண்ணாமலை கிரிவலப்பாதையை தூய்மைப்படுத்தும் பணியில் 2 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் களமிறங்கி ஒரே நாளில் 250 டன் குப்பைகள் அகற்றினர். அப்போது, தூய்மைப் பணியாளர்களுக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் கைகூப்பி நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருவண்ணாமலையில் புகழ்மிக்க கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து, நேற்று பவுர்ணமி கிரிவலம் அமைந்தது. கிரிவல பக்தர்களுக்கான குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரடி மேற்பார்வையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் தர்ப்பகராஜ் ஒருங்கிணைப்பில் 20 குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.

Advertisement

இந்நிலையில், மகா தீபத்திருவிழா நிறைவடைந்த நிலையில், திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவல பாதையை ஒட்டுமொத்தமாக தூய்மை செய்யும் பணி நேற்று முழு வீச்சில் நடந்தது. அதையொட்டி, திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 1200 பேர் மற்றும் ஊராட்சிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 800 பேர் உள்பட மொத்தம் 2 ஆயிரம் தூய்ைமப்பணியாளர்கள் களமிறங்கி, தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். மேலும், 112 வாகனங்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவடிக்கையால், இந்த ஆண்டு பிளாஸ்டிக் குப்பைகள் வெகுவாக குறைந்திருந்தன. அன்னதானம் வழங்கிய இடங்களிலும் பெருமளவு குப்பை கழிவுகள் குறைந்திருந்தது.

இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நேற்று நடைபெற்ற ஒட்டுமொத்த தூய்மைப்பணியை, கலெக்டர் தர்ப்பகராஜ் நேரடி ஆய்வு செய்தார். அப்போது, தூய்மைப்பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு கை கூப்பி நன்றி தெரிவித்தார். அதனால், தூய்மைப் பணியாளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். மேலும், இரவு, பகலாக பணியில் ஈடுபட்டு, நகரையும், கிரிவலப்பாதையையும் தூய்மைப்படுத்திய பணியாளர்களுக்கு தமது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, மகளிர் திட்ட அலுவலர் தனபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement