தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுபாட்டிலுடன் மீன் வியாபாரி அரை நிர்வாணத்தில் ரகளை ஆரணியில் பரபரப்பு காவல்நிலையம், எம்எல்ஏ அலுவலகம் முன்பு

ஆரணி, நவ. 5: ஆரணியில் காவல்நிலையம், எம்எல்ஏ அலுவலகம் முன்பு மதுபாட்டிலுடன் மீன் வியாபாரி அரை நிர்வாணத்தில் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் விஏகே நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின்(60) மீன் வியாபாரி. இவருக்கு மனைவி, 2 மகள் உள்ளனர். ஸ்டாலின் வழக்கம்போல் நேற்று மீன் வியாபாரத்தை முடித்துவிட்டு, மதுபோதையில் ஆரணி டவுன் பழைய பஸ்நிலையம் வழியாக கோட்டை மைதானம் அருகில் சென்றார். அப்போது எம்எல்ஏ அலுவலகம் முன்பு கையில் மதுபாட்டில்களை வைத்துக்கொண்டு ஆடையை கழற்றி அரை நிர்வாணமாக நின்றுகொண்டு அவ்வழியாக சென்றவர்களிடம் ரகளையில் ஈடுபட்டார்.

Advertisement

மேலும் சாலையின் நடுவில் நின்று கொண்டு அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளை மடங்கியும், நடந்து சென்ற பெண்களை வழிமறித்து ஆபாசமாக பேசி, பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். தொடர்ந்து எம்எல்ஏ அலுவலகம் முன்பு அமர்ந்து ஆடையை கழற்றி வீசி சாலையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு, வடிவேல் பாணியில் அலப்பறையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். தொடர்ந்து நகர காவல் நிலையத்திற்கு சென்று, ஸ்டேஷன் முன்பு அலப்பறை செய்து, ரகளையில் ஈடுபட்டார். உடனே, காவல்நிலையத்தில் இருந்து வந்த போலீசார் அவரை எச்சரித்து, போதையில் இருந்ததால் அவரை அங்கிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement